
மலரைத்
தொட முடியாத
ஏக்கத்தோடு
பல இலைகள்
உதிரலாம்...
பூக்களை
உரசிய இலைகள்
அதுவே
முக்தியெனவும்
பரிகசிக்கலாம்...
மனிதனின்
கடவுள்களிடம்
பூக்களுக்கே
இருப்பிடம் என
இலைகள்
பொறாமைக் கூட
படலாம்...
சருகாகி மண்ணாகிப்
போனப் பிறகு
புத்தி தெளியும்
பூவென்ன.....
இலையென்ன.......
0 comments:
Post a Comment