
இன்னும்
ஒருமுறையேனும்
மறக்கவும் மன்னிக்கவும்
முயற்சித்திருக்கலாம்
இல்லிக்குடமாய்
மனம் இருந்திருந்தால்………………
ஒட்டுப் போட்ட
ஞாபகங்கள் கூட
ஒட்டிக் கொண்டு
சாக்காடு வரை
வந்து சேரும்
சாத்தியங்கள்
இருக்கும் போது…………………
மறத்தலில் மன்னிப்பையும்
மன்னிப்பில் மறத்தலையும்
ஒலித்துக்கொள்ள
சந்தர்ப்பங்கள் ஏது?
மரணங்களுக்கப்பால்
ஒரு வேளை
மறக்கலாம்….
மன்னிக்கலாம்…
இல்லாமலும் போகலாம்……..
- தினேசுவரி
0 comments:
Post a Comment